I got my name in lights with notcelebrity.co.uk

Saturday, October 29, 2011

இவர்கள் மாணவர்களா மெசீன்களா?

படிக்கும் குழந்தையின் மனநிலை என்ன?

இங்கு   மாணவர்கள் தங்கியும்(hostel students) வெளியே இருந்தும் வந்தும் (dayscholer  Students) மாணவர்கள் படிக்கிறார்கள்.இங்கு படிக்கும் மாணவர்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் என்றால் அது லோக்கல் மாணவர்கள்தான்.ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள் ஆனால் மதிப்பெண் விசயத்தில் days choler  மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகின்றனர்.
காரணம் ரிலக்ஸேசன்.பள்ளியில் தங்கி படிக்கும் போது அது கொஞ்சமும் கிடைப்பது இல்லை எப்போதும் படிப்பு, புத்தகம், அதே இடம் ,ஆசிரியர்கள், ஸ்டடி மாஸ்டர்கள் கொஞ்சமும் வெளிஉலகம் பற்றி தெரியாது சுதந்திர காற்று இல்லாத பட்சத்தில் மார்க் எப்படி வாங்க முடியும் இதுதான் என் கேள்வி?

இந்த மூன்று நாள் தீபாவளி விடுமுறை நாளில் ஊருக்கு போக ஒரு நாள் வர ஒரு நாள் இடையில் தீபாவளி மாணவர்கள் எப்படி ரிலாக்ஸாக படிப்பார்கள் ?இதை பெற்றோரும் நிர்வாகமும் யோசிக்க வேண்டும்.நிர்வாகத்திற்கு  பணத்தை தவற வேற ஏதும் தெரியாது பெற்றோர்களும் பிள்ளைகள் படித்தால் மட்டும்  போதும். ஆனால் பதிப்படைவது மாணவர்கள்தான் அதை பெற்றோரும் நிர்வாகமும் உணராத பட்சத்தில் மாணவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும்     


Wednesday, October 19, 2011

பாவம் இவர்களின் நிலைமை

பாவம் இவர்களின்  நிலைமை
ஆம் நண்பர்களே நான்தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஸ்டடி மாஷ்டர்களைதான் குறிப்பிடுகிறேன்.அவர்கள் காலை நாலு மணிக்கே எழுந்து இரவு பதினோரு மணிவரை மானவர்களுனேயே இருக்க வேண்டும் 
இவர்கள் அதிகமா D.Ted முடித்த பட்டதாரிகள் நண்பர்களே இவர்கள்தான் மாணவர்களின் முழு பொறுப்பு அறுபது மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி மாஷ்டர் என்ற விதம் பணிபுரிகிறார்கள்.
தினமும் குளிபதற்கும் பாத்ரூம் போனாலும் குட ஒரு பாடி கார்ட் போல இருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவர்களின் டோபி கணக்கு முதல் அனைத்தையும் பார்க்க வேண்டும் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது. இவர்களுக்கு ரெஸ்ட் என்பது மதியம் கிடைக்கும் ஒரு மணிநேரம்தான். மற்ற ஸ்டடி மாஷ்டர் யாரவது லீவ் போட்டால் அந்த ரெஸ்ட்டும் கிடையாது.
மானேஜ்மேண்டால் அதிகமாக திட்டு வாங்குபவர்களும் இவர்கள்தான் இவர்களுக்கு சம்பளமும் குறைவு என்பதும் கொடுமையான விஷயம்.
இவர்களுக்கு லீவும் கெடயாது எல்லா நாளும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

Thursday, October 13, 2011

மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று எதை நினைக்கிறிர்கள்

மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று எதை நினைக்கிறிர்கள் நண்பர்களே இதை ஒரு விவாதமாக போடலாம் என நினைக்கிறேன்  தங்களின் மேலான கருத்தைக் கூறவும்.



 தற்கொலைக்கு காரணம் என்று எதை நினைக்கிறிர்கள்  

1 .மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதாவது தனியார் பள்ளிகளில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலை பளு மாணவர்கள் எந்நேரமும் புத்தகங்களுடனேயே இருக்க வைக்ககூடிய இறுக்கமான சூழல். 

2 .தோல்வியை தாங்கிக் கொள்ளக்குடிய மனநிலை இல்லாமை

3 .சிறு வயதிலேயே ஏற்படும் காதல் தோல்விகள்

 அல்லது வேறு என்ன கரணம் என நீங்கள் நினைக்கிறிர்கள் 



Wednesday, October 12, 2011

மாணவர்களின் நிலை

மாணவர்களின் நிலை:

இங்கு மாணவர்கள் காலை 5  மணிக்கு எழுந்து படிக்கச் ஆரம்பித்தால் இரவு 10  மணிவரை படிக்க வேண்டும் 6 th முதல் 9th வரை.இதனாலேயே படிப்பின் மீது இங்குள்ள மாணவர்களின் மோகம் குறைந்து காணப் படுகிறது.இங்கு மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கிடையாது இதனால் மாணவர்கள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களின் அறையில் யாருக்கும் தெரியாமல் விளையாடுவர் மறுநாள் வகுப்பில் வந்து தூங்குவர்.இந்த கல்வியின் மூலம்  என்ன பயன்  பெற்றோர்களே சிந்தியுங்கள்.


நிர்வாகமும் இதை கவனிக்க வேண்டும் மாணவர்களை கொஞ்சம் ப்ரீ யாக விட்டு படிக்க வைத்தால் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்.அவர்களின் கவனமும் படிப்பின் பக்கம் திரும்பும் இல்லையனில் வகுப்பில் தூங்கத்தான் செய்வார்கள்.பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல நிர்வாகம் இதை விரைவில் புரிந்து கொள்ள வேண்டும்.


மாணவர்களுக்கு நல்ல உணவும் படிக்கின்ற சூழலையும் அமைத்து கொடுக்க வேண்டும்.அனால் அது இங்கு இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள்

Monday, October 10, 2011

இப்படியும் ஒரு பள்ளி இது நியாயமா?

இப்படியும் ஒரு பள்ளி இது நியாயமா?

அந்தியூர்க்கு  அருகில் அமைந்துள்ளது ஒரு பெரிய தனியார் பள்ளி இதை பள்ளி என்பதை விட சிறுவர்களின் ஜெயில் என குறிப்பிடலாம் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் அபபடித்தான் நண்பர்களே இங்கு மாதம் ஒரு பெரிய தொகையை மெஸ் பீசாக ஒரு பெரிய தொகை வாங்கப் பட்டாலும் சிறுவர்களுக்கு சரி இல்லாத உணவைத்தான் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் இப்போதெல்லாம் விடுமுறை என்பதே விடுவதில்லை ஏனென்றால் விட்டால் அந்த நாட்களின்  மெஸ்  பீஸ் போய்விடுமே அதனால் விடுமுறை கிடையாது வாரத்தில் எல்லா நாட்களும் பள்ளி உண்டு.

இந்த முறை காலாண்டு தேர்வு விடுமுறை அரை நாள் கூட விடவில்லை தேர்வு முடிந்த மதியமே வழக்கம் போல பள்ளி செயல்பட்டது இதான் மிகப்பெரிய கொடுமை அதை விட கொடுமை தீபாவளிக்கு வெறும் மூன்று நாட்களே விடுமுறை.

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் குழந்தைகள் படிக்கிறார்கள் மூன்று நாட்கள் விடுமுறை விட்டால் அவர்கள் பயணம் செய்யவே மூன்று நாட்கள் ஓடிவிடும் பாவம் அவர்களின் முகத்தில் ஏக்கம் தெரிகிறது அப்புறம் எப்படி படிப்பார்கள் சொல்லுங்க 

பெற்றோர்களும் இதைப்பற்றி கேட்பது இல்லை ஒருவர் இருவர் கேட்டு என்ன பிரயோஜனம் பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் படிப்பு முக்கியம்தான் அதற்க்கு கொஞ்சம் வோய்வும் வேண்டும் இதனால் குழந்தைகளின் மனநிலை மிகவும் பாதிக்கப் படுகிறது இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இங்கு அரசு விடுமுறை நாட்களிலும் பள்ளி செயல் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு மாணவர்களின் நிலை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Sunday, July 17, 2011

காட்டு பூச்சி

என் பேர் காட்டு பூச்சி நான் ஒரு அப்படேக்கர் நான் குந்துபாயூர் காரன்